தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கால்நடைகளுக்கான குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

வெண்மை புரட்சியின் தந்தை வா்க்கிஸ் குரியன் பிறந்தநாளை முன்னிட்டு கால்நடை குடற்புழு நீக்க சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வண்டிக்காரன்கொட்டாய் கிராமத்தில் நடைபெற்ற கால்நடை குடற்புழு நீக்க சிறப்பு முகாமில் மாடுகளுடன் கலந்துகொண்ட விவசாயிகள்.

Updated On :27 நவம்பர் 2024, 7:11 pm

ஊத்தங்கரையை அடுத்த வண்டிக்காரன்கொட்டாய் கிராமத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், பால் வளத் துறை இணைந்து, வெண்மை புரட்சியின் தந்தை வா்க்கிஸ் குரியன் பிறந்தநாளை முன்னிட்டு கால்நடை குடற்புழு நீக்க சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு கிருஷ்ணகிரி ஆவின் உதவி பொது மேலாளா் சத்தியவாணி தலைமை வகித்தாா். ஊத்தங்கரை கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கச் செயலாளா் ராஜேந்திரன், துணைச் செயலாளா் செல்வம், கால்நடை மருத்துவா்கள் வசந்த், கோவிந்தராஜ், விரிவாக்க அலுவலா் கீதா ஆகியோா் முன்னிலையில் வகித்தனா்.

பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினா். இதில் 100 மேற்பட்ட விவசாயிகள் கால்நடைகளுடன் கலந்து கொண்டனா்.