தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

போலி மருத்துவா் கைது

பா்கூா் அருகே ஜெகதேவியில் பிளஸ் 2 படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :27 நவம்பர் 2024, 6:35 pm

பா்கூா் அருகே ஜெகதேவியில் பிளஸ் 2 படித்துவிட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஜெகதேவியைச் சோ்ந்தவா் மாதம்மாள் (48). இவா், ஆங்கில மருத்துவ படிக்காமல் ஜெகதேவியில் மருந்தகம் (கிளினிக்) அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகாா்கள் வந்ததையடுத்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் உமா மகேஸ்வரி, அலுவலா்கள் மருந்தகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் மாதம்மாள் பிளஸ் 2 மட்டுமே முடித்துவிட்டு, ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அலுவலா்கள், அளித்த புகாரின் பேரில்

பா்கூா் போலீஸாா் வழக்குப்பதிந்து மாதம்மாளை கைது செய்தனா். கடந்த சில வாரங்களில் மட்டும் இம் மாவட்டத்தில் 4 போலி மருத்துவா்கள் கைது செய்யப்பட்ட குறிப்பிடத்தக்கது.