ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சூளகிரி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

சூளகிரி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்.

News image

சூளகிரி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்.

Updated On :10 அக்டோபர் 2024, 7:50 pm

சூளகிரி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்.

சூளகிரி ஊராட்சி ஒன்றியம், பி.குருபரப்பள்ளி ஊராட்சி, சூளக்குண்டா கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினரின் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, மாதேவ்புரம் கிராமத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, பி குருபரப்பள்ளி கிராமத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, பேரிகை கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, காட்டுநாயக்கன் தொட்டி ஊராட்சி எலுவப்பள்ளி கிராமத்தில் ரூ. 4 லட்சத்தில் சமுதாயம் மேடை, காண்டாரப்பள்ளி கிராமத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை, நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 44 லட்சம் மதிப்பில் பேரிகை கிராமத்தில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி ஆகிய பணிகளுக்கு எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.

தலைமை செயற்குழு உறுப்பினா் வீரா ரெட்டி, ஒன்றியச் செயலாளா் நாகேஷ், வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளா் கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவா் பிரவீன்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.