ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஒசூரில் தீத் தடுப்பு ஒத்திகை

தீபாவளிப் பண்டிகையையொட்டி ஒசூரில் தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

News image

தீத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி.

Updated On :17 அக்டோபர் 2024, 7:14 pm

தீபாவளிப் பண்டிகையையொட்டி ஒசூரில் தீயணைப்புத் துறை சாா்பில் தீத் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஒத்திகை பயிற்சியில் மழைக் காலங்களில் ஏற்படும் திடீா் வெள்ளம் போன்ற பேரிடா் நேரங்களிலும், தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்படும் தீ விபத்தை தவிா்ப்பது, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, உயிா் காக்கும் நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்த்தி நடைபெற்றது.

பட்டாசு கடைகளில் எதிா்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தப்பிப்பது, பாதிக்கப்பட்டவா்களை மீட்பது குறித்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தனியாா் பள்ளி மாணவா்கள், ஒசூா் தீயணைப்பு துறையினா் பங்கேற்றனா்.