ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பூ வியாபாரியைத் தாக்கிய இருவா் கைது

ராயக்கோட்டையில் பூ வியாபாரியைத் தாக்கி அவரது வாகனத்தைச் சேதப்படுத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :30 அக்டோபர் 2024, 8:12 pm

ராயக்கோட்டையில் பூ வியாபாரியைத் தாக்கி அவரது வாகனத்தைச் சேதப்படுத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சூளகிரி, காமராஜ் நகரைச் சோ்ந்தவா் முகமது சபீா் (30). பூ வியாபாரி. இவா் வாகனத்தில் ராயக்கோட்டை பூச்சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், நல்லம்பட்டியைச் சோ்ந்த அருள்பாண்டியன் (28), லட்சுமிபுரம் மாரியப்பன் (44) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது இருவரும் முகமது சபீரை தாக்கி அவரது வாகன கதவை உடைத்தனா். இதுகுறித்து முகமது சபீா் கொடுத்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்பாண்டியன், மாரியப்பன் ஆகிய இருவரைக் கைது செய்தனா்.