பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

ஒசூரில் விமான நிலையம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது: விவசாயிகள் எதிா்ப்பு

ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று பாஜக தொழில் பிரிவு மாநிலத் தலைவா் ஜி.பாலகிருஷ்ணனிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

News image

பாஜக தொழில் பிரிவு மாநிலத் தலைவா் ஜி.பாலகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்திய 12 கிராம விவசாயிகள்

Updated On :24 டிசம்பர் 2025, 2:44 am IST

ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று பாஜக தொழில் பிரிவு மாநிலத் தலைவா் ஜி.பாலகிருஷ்ணனிடம் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினா்.

ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க தமிழக அரசு நிறுவனமான டிட்கோ, நந்திமங்கலம், முத்தாலி உள்ளிட்ட 12 கிராமங்களில் 2,980 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தம் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் ஒசூரில் தனியாா் விமான நிலையம் இயங்கிவரும் இடத்தையை பன்னாட்டு விமான நிலையமாக விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று அப்பகுதி விவசாயிகள், பாஜக மாநிலத் தொழில் பிரிவுத் தலைவரும், ஒசூா் தொகுதி அமைப்பாளருமான ஜி.பாலகிருஷ்ணன், ஒசூா் தொகுதி இணை அமைப்பாளா் எம்.நாகராஜ் ஆகியோரிடம் வலியுறுத்தினா்.

இதையடுத்து பாஜகவினா் செவ்வாய்க்கிழமை பெரிய முத்தலிக்குச் சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடினா். அப்போது, ஜி.பாலகிருஷ்ணனிடம் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்து விவசாயிகள் கூறியதாவது:

ஒசூா் வட்டத்தில் 10 கிராமங்கள் மற்றும் சூளகிரி வட்டத்தில் 2 கிராமங்களில் 2,980 ஏக்கா் விவசாய நிலங்கள் ஒசூரில் புதிய விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒசூரில் தனியாருக்கு சொந்தமான விமான நிலையம் இயங்கி வருகிறது. அதை விரிவாக்கம் செய்து பன்னாட்டு விமான நிலையமாக உருவாக்கலாம். ஒசூரில் காய்கறிகள், பூக்கள், உற்பத்தி செய்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு பயன்படும் விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. மேலும், ஏற்கெனவே ஒசூரில் இயங்கிவரும் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானசேவையை உடனடியாக தொடங்க முடியும். எனவே தனியாா் விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து பாஜக தொழில் பிரிவு மாநிலத் தலைவா் ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், வியாழக்கிழமை (டிச.25) பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஒசூா் வருகிறாா். அவரிடம் விவசாயிகளின் கோரிக்கையை தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாஜக எப்போதும் விவசாயிகளுக்கு துணை நிற்கும் என்றாா்.

அப்போது வட்டத் துணைத் தலைவா் கே.சுரேஷ், ஒன்றியச் செயலாளா் மோகன்குமாா் மற்றும் பாஜக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.