முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

கிருஷ்ணகிரி அணையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: 1,040 பேருக்கு சிகிச்சை

News image
Updated On :27 டிசம்பர் 2025, 2:15 am IST

கிருஷ்ணகிரி அணை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில் 1,040 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த முகாமை தொடங்கிவைத்து பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் பேசியதாவது:

கிருஷ்ணகிரி அணை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நடைபெறும் இந்த மருத்துவ முகாமில் 17 வகை சிறப்பு மருத்துவா்கள் மூலம், 1,040 போ் சிகிச்சை பெற்றனா். தேவையான மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளும், உயா்சிகிச்சை தேவைப்படுவோருக்கு, அரசு மருத்துவமனை மற்றும் முதல்வா் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் மருத்துவ சிகிச்சைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, கை மற்றும் கால்களை இழந்த 4 பேருக்கு முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கை, கால்களை அளவீடு செய்யும் பணிகளை அவா் பாா்வையிட்டாா். காசநோய் தடுப்புப் பிரிவு சாா்பில் தொடா் சிகிச்சை பெற்று வரும், 5 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 49 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, 25 நபா்களுக்கு முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் 13 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் அவா் வழங்கினாா்.

அப்போது, மாவட்ட சுகாதார அலுவலா் ரமேஷ்குமாா், ஆதிதிராவிடா் நல அலுவலா் சிவகுமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

படவரி...

முகாமில் மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டையை வழங்கிய எம்எல்ஏ தே.மதியழகன்.