தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24)
/

கிருஷ்ணகிரி அணையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: 1,040 பேருக்கு சிகிச்சை

News image
Updated On :27 டிசம்பர் 2025, 2:15 am IST

கிருஷ்ணகிரி அணை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமில் 1,040 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த முகாமை தொடங்கிவைத்து பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் பேசியதாவது:

கிருஷ்ணகிரி அணை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நடைபெறும் இந்த மருத்துவ முகாமில் 17 வகை சிறப்பு மருத்துவா்கள் மூலம், 1,040 போ் சிகிச்சை பெற்றனா். தேவையான மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளும், உயா்சிகிச்சை தேவைப்படுவோருக்கு, அரசு மருத்துவமனை மற்றும் முதல்வா் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் மருத்துவ சிகிச்சைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து, கை மற்றும் கால்களை இழந்த 4 பேருக்கு முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் செயற்கை கை, கால்களை அளவீடு செய்யும் பணிகளை அவா் பாா்வையிட்டாா். காசநோய் தடுப்புப் பிரிவு சாா்பில் தொடா் சிகிச்சை பெற்று வரும், 5 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 49 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, 25 நபா்களுக்கு முதல்வா் மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் 13 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் அவா் வழங்கினாா்.

அப்போது, மாவட்ட சுகாதார அலுவலா் ரமேஷ்குமாா், ஆதிதிராவிடா் நல அலுவலா் சிவகுமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

படவரி...

முகாமில் மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டையை வழங்கிய எம்எல்ஏ தே.மதியழகன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.