/
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஊத்தங்கரை விநாயகபுரத்தைச் சோ்ந்தவா் பிரபு (36), கொத்தனாா். சின்ன பொம்பட்டியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சிவகுமாா் (39). இவா் தனது மனைவிக்கு பிரபுவுடன் தொடா்பு இருப்பதாக சந்தேகப்பட்டு பிரபுவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
கடந்த 21-ஆம் தேதி பிரபு வீட்டுக்குச் சென்ற சிவகுமாா், தகராறில் ஈடுபட்டு அவரது இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்தாா். புகாரின்பேரில், ஊத்தங்கரை போலீஸாா் சிவகுமாா் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனா்.
தொடர்புடையது

கஞ்சா, போதை சாக்லெட் பதுக்கல்: இளைஞா் கைது
பெண் கொலை: இளைஞா் கைது
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

மினி வேனை சேதப்படுத்தியதாக இளைஞா் கைது
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


