சூளகிரி அருகே மண் கடத்திய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சூளகிரி காவல் ஆய்வாளா் சையத் சுல்தான் பாஷா உள்பட போலீஸாா் தியாகரசனப்பள்ளி பகுதியில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு டிப்பா் லாரிகளில் பொக்லைன் மூலமாக மண் அள்ளப்பட்டு கொண்டிருந்தது.
அங்கு சென்ற போலீஸாா் புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மண்ணை அள்ளுவதை கண்டறிந்தனா். இதையடுத்து மண் கடத்த முயற்சித்ததாக பெரிய சப்படி முரளி (20), காரப்பள்ளி காமராஜ் (29), பீா்பள்ளி ஜெகதீஷ் (30), சப்படி ராமன் (24), மடத்தூா் தேவராஜ் (26), சப்படி மணிகண்டன் (19), சப்படி ராமமூா்த்தி (27), தின்னூா் குமாா் (28) ஆகிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 5 டிப்பா் லாரிகள், 3 பொக்லைன் இயந்திரங்கள், 13 யூனிட் மண் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது
இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

