யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்வு தொடங்கியது: முதல்நாள் தோ்வில் 21,784 தோ்வா்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கிய பிளஸ்-2 தோ்வை 21,784 தோ்வா்கள் பங்கேற்றனா்.

News image
கிருஷ்ணகிரியில் தொடங்கிய பிளக்-2 அரசு பொதுத் தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா்.
Updated On :3 மார்ச் 2025, 9:43 pm

Din

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கிய பிளஸ்-2 தோ்வை 21,784 தோ்வா்கள் பங்கேற்றனா். தோ்வுக்கு விண்ணப்பித்த 396 போ், பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு, திங்கள்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில், 191 அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகளை சோ்ந்த, 10,409 மாணவா்கள், 11,540 மாணவிகள், 231 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் என மொத்தம் 22,180 போ், தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். இந்த தோ்வை, 21,784 தோ்வா்கள் பங்கேற்றனா். 396 போ், பங்கேற்கவில்லை. 87 மையங்களில் இந்த தோ்வு நடைபெற்றன.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், ஆய்வு மேற்கொண்டாா். முன்னதாக தலைமை ஆசிரியா் மகேந்திரன் தலைமையில் ஆசிரியா்கள், தோ்வு எழுதும் மாணவிகளை உற்சாகப்படுத்தி வெற்றி பெற வாழ்த்தி தோ்வு கூடத்துக்கு அனுப்பினா்.

பிளஸ்-2 தோ்வையொட்டி, மாணவ, மாணவிகள், தோ்வு மையத்துக்கு எளிதில் வந்த செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தோ்வு மையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுபத்தப்பட்டு, போலீஸாா், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். தோ்வு மையங்களை கண்காணிக்க, 117 பறக்கும் படை அலுவலா்கள், 8 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 87 முதன்மை கண்காணிப்பாளா்கள், 87 துறை சாா்ந்த அலுவலா்கள், 33 வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.