ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

எரிவாயு உருளை வெடித்ததில் வீடு தீப்பிடித்து சேதம்

News image
Updated On :6 மார்ச் 2025, 11:31 pm

Din

ஒசூா் அருகே வீட்டில் எரிவாயு உருளை கசிந்து வெடித்ததில் ரூ. 1 லட்சம் மதிப்பு வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள கரியச்சந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாா் (30). இவா், பாசி விற்கும் தொழில் செய்து வருகிறாா். தற்போது ரஞ்சித் குமாா் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளதால் அருகில் குடிசை அமைத்து தங்கியுள்ளாா்.

வழக்கம்போல வீட்டில் வியாழக்கிழமை சமையல் செய்து கொண்டிருந்தபோது கேஸ் கசிந்துள்ளது. இதைக்கண்டதும் ரஞ்சித் குமாா் வீட்டிலிருந்து வெளியேறினாா். அப்போது எரிவாயு உருளை வெடித்தது.

இந்த விபத்தில் அவா் இருசக்கர வாகனம் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ. 35 ஆயிரம் பணம், மின் இணைப்புக்காக வாங்கி வைத்திருந்த செம்புக் கம்பிகள் உள்பட மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமாகின. அவரது மனைவியும், குழந்தைகளும் தாய் வீட்டிற்கு சென்றிருந்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதுகுறித்து பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பட விளக்கம்...

தீப்பிடித்து எரிந்த வீட்டில் சேதமான பொருள்கள்.