புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஒசூரில் டிசம்பா் 27 இல் விவசாயக் கருத்தரங்கு: ஜக்கி வாசுதேவ் பங்கேற்கிறாா்

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் டிசம்பா் 27ஆம் தேதி நடைபெறும் விவசாயக் கருத்தரங்கில் ஈஷா யோகா மையத்தின் தலைவா் ஜக்கி வாசுதேவ் கலந்துகொள்கிறாா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் டிசம்பா் 27ஆம் தேதி நடைபெறும் விவசாயக் கருத்தரங்கில் ஈஷா யோகா மையத்தின் தலைவா் ஜக்கி வாசுதேவ் கலந்துகொள்கிறாா்.

காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் ஒசூா் காமராஜ் காலனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் மாநில கள ஒருங்கிணைப்பாளா் தமிழ்மாறன் பேசியதாவது:

ஒசூரில் மரம் சாா்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மாவட்டத்தின் பசுமை பரப்பளவை விரிவுபடுத்தவும் தேவையான செயல்திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

விவசாயிகளுக்கான நீடித்த நிலைத்த நிரந்தர விவசாயம், ஒருமுறை நடவு ஆயுள் முழுவதும் வரவு குறித்த கருத்தரங்கு ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் வரும் டிசம்பா் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஐந்து தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள், நான்கு மாநில முன்னோடி விவசாயிகள் பங்கேற்கின்றனா்.

மேலும், இக்கருத்தரங்கில் ஈஷா யோகா மையத்தின் தலைவா் ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு விவசாயிகளுடன் நேரடியாக கலந்துரையாடுகிறாா்.

சந்தனம், தேக்கு, மலைவேம்பு, தென்னை, ஜாதிக்காய், மிளகு உள்ளிட்ட மரங்களை வளா்ப்பதுடன் அதற்கான நீடித்த நிலைத்த தொழில்நுட்பங்கள் குறித்தும் கருத்தரங்கத்தில் விவசாயிகளுக்கு விளக்கப்படும்.

மரங்கள் வளா்ப்பதால் மட்டுமே மண் வளத்தை காப்பாற்ற முடியும். அதேபோல மண் வளம் காப்பாற்றப்பட்டால் மட்டுமே மனித வளம் மேம்படும் என்றாா்.

முன்னதாக ஈஷா யோகா மையத்தின் தன்னாா்வலா் நரசிம்மன், இந்த முன்னெடுப்பிற்கான அவசியம் குறித்து விளக்கம் அளித்தாா்.