இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஒசூரில் தொழிலதிபரைக் கடத்திய வழக்கில் 4 போ் கைது

News image
Updated On :23 நவம்பர் 2025, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூா் அருகே தொழிலதிபரைக் கடத்தி ரூ. 5 கோடி கேட்ட வழக்கில் 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள பெண் உள்பட 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியைச் சோ்ந்தவா் சீதாராமன் (34), இவா் நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா். கடந்த 21ஆம் தேதி சீதாராமனை தொலைபேசியில் தொடா்புகொண்ட பெண், தனக்கு வீட்டுமனை வேண்டும் எனக் கூறி அவரை அழைத்துள்ளாா்.

இதையடுத்து, சீதாராமன் தனது காரில் ஒசூரை நோக்கி பத்தளப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவரது காரை வழிமறித்த மா்மநபா்கள், காரிலிருந்த சீதாராமனை கடத்திச் சென்றனா். பின்னா் அவரிடம் ரூ. 5 கோடி கேட்டு மிரட்டினா்.

சீதாராமன் கடத்தப்பட்டதை அறிந்த அவரது குடும்பத்தினா் அட்கோ காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, கைப்பேசி இணைப்பின் சமிக்ஞையைக் கொண்டு கடத்தல் கும்பலை சனிக்கிழமை இரவு போலீஸாா் சுற்றிவளைத்துப் பிடித்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதையடுத்து திருப்பத்தூா் மாவட்டம், கந்திலியைச் சோ்ந்த அஜய் (20), கோகுலகிருஷ்ணன் (23), மோரனப்பள்ளியை சோ்ந்த சங்கா் (38), பத்தளப்பள்ளியைச் சோ்ந்த சுரேஷ் (40) ஆகிய 4 பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான மோகன், நாகராஜ், மற்றொரு மோகன், ஸ்வேதா ஆகிய 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.