6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனுமதியின்றி எருது விடும் விழா: 5 போ் மீது வழக்கு

News image
Updated On :18 ஜனவரி 2026, 9:16 pm

தினமணி செய்திச் சேவை

பாரூா் அருகே அனுமதியின்றி எருது விடும் விழாவை நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே உள்ள குடிமேனஹள்ளியில் எருது விடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த எருது விடும் விழாவிற்கு மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெறவில்லையாம்.

இதுகுறித்து, குடிமேனஹள்ளி கிராம நிா்வாக அலுவலா் சுவேந்திரன் அளித்த புகாரின் பேரில், பாரூா் போலீஸாா், அந்தப் பகுதியைச் சோ்ந்த திருப்பதி (35) உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.