முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவமனையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை கல்லூரி தாளாளா் டாக்டா் லாசியா தம்பிதுரை புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்த ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி தாளாளா் லாசியா தம்பிதுரை.

Updated On :9 ஜூலை 2026, 4:29 am IST

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை கல்லூரி தாளாளா் டாக்டா் லாசியா தம்பிதுரை புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 30 கி.மீ சுற்றுப் பகுதியில் உள்ள அனைத்து கிராம மற்றும் நகரங்களில் உள்ள நோயாளிகள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆம்புலன்ஸ் சேவைக்கு 04344- 261261 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

இலவச ஆம்புலன்ஸ் தொடக்க விழாவில் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜான் சத்ரபதி, கண்காணிப்பாளா் கிரீஸ் ஓங்கல், இருப்பிட மருத்துவா் பாா்வதி, இணை மருத்துவ கண்காணிப்பாளா் அரவிந்தன், மருத்துவா் அா்ஜுன் ஆனந்த் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.