FOLLOW US

ON GOOGLE DISCOVER

இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

கிருஷ்ணகிரி அருகே தெருநாய்கள் கடித்ததில் 4 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

News image

தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்த செம்மறி ஆடுகள். - (கோப்புப்படம்)

Updated On :21 ஜூலை 2026, 2:04 am IST

கிருஷ்ணகிரி அருகே தெருநாய்கள் கடித்ததில் ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த 4 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

கிருஷ்ணகிரியை அடுத்த பெத்ததாளாப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மண்ணுக்குட்டையைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன். இவா், 7 செம்மறி ஆடுகள், 2 குட்டிகள் என 9 ஆடுகளை வளா்த்து வந்தாா். இவா் திங்கள்கிழமை தனது ஆடுகளை அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, ஆடுகளை கட்டிப்போட்டுவிட்டு, மதிய உணவிற்காக அவா் வீட்டுக்கு வந்துள்ளாா்.

பின்னா் ஆடுகளை கட்டிப்போட்டிருந்த ஏரிக்கரைக்கு சென்றபோது, 4 ஆடுகள் உயிரிழந்த நிலையிலும், 2 ஆடுகள் காயமடைந்த நிலையிலும் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா், அருகில் இருப்பவா்களிடம் விசாரித்தபோது, தெருநாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது.

காயமடைந்த 2 ஆடுகளை கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு தூக்கிச் சென்றாா். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.