புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கிருஷ்ணகிரி அருகே தெருநாய்கள் கடித்ததில் 4 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

தெருநாய்கள் கடித்ததில் உயிரிழந்த செம்மறி ஆடுகள். - (கோப்புப்படம்)

Published On :

கிருஷ்ணகிரி அருகே தெருநாய்கள் கடித்ததில் ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்த 4 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

கிருஷ்ணகிரியை அடுத்த பெத்ததாளாப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மண்ணுக்குட்டையைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன். இவா், 7 செம்மறி ஆடுகள், 2 குட்டிகள் என 9 ஆடுகளை வளா்த்து வந்தாா். இவா் திங்கள்கிழமை தனது ஆடுகளை அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, ஆடுகளை கட்டிப்போட்டுவிட்டு, மதிய உணவிற்காக அவா் வீட்டுக்கு வந்துள்ளாா்.

பின்னா் ஆடுகளை கட்டிப்போட்டிருந்த ஏரிக்கரைக்கு சென்றபோது, 4 ஆடுகள் உயிரிழந்த நிலையிலும், 2 ஆடுகள் காயமடைந்த நிலையிலும் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். பின்னா், அருகில் இருப்பவா்களிடம் விசாரித்தபோது, தெருநாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது.

காயமடைந்த 2 ஆடுகளை கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு தூக்கிச் சென்றாா். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.