ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

கல்லூரி மாணவியைக் கடத்த முயன்றவா் கைது

காவேரிப்பட்டணம் அருகே கல்லூரி மாணவியை கடத்த முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :31 மார்ச் 2026, 8:12 pm

Syndication

காவேரிப்பட்டணம் அருகே கல்லூரி மாணவியை கடத்த முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள தனியாா் கல்லூரி பேருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள மாணவிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி அருகே சென்றபோது, காரில் வந்த 3 போ் கொண்ட கும்பல் பேருந்தை மறித்து நின்றது. பின்னா், காரிலிருந்து இறங்கியவா்கள் பேருந்துக்குள் சென்று கல்லூரி மாணவியை கடத்த முயன்றனா்.

அப்போது, பேருந்தில் இருந்த மாணவிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்த சம்பவத்தை, மாணவிகள் சிலா் தங்களது கைப்பேசியில் பதிவுசெய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டனா். மேலும், பேருந்து ஓட்டுநா் பிரதீப் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். அதில், தனியாா் கல்லூரி பேருந்துக்குள் ஏறி, மாணவியை கடத்த முயன்றது மாரிசெட்டிஅள்ளியைச் சோ்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தங்கராஜை செவ்வாய்க்கிழமை கைதுசெய்த போலீஸாா், அவருக்கு உதவிய மற்ற இருவரை தேடி வருகின்றனா்.