‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 மே 2026, 1:31 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சாா்பில், சட்டம் -ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் ரெளடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நபா்கள்மீது தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு நடவடிக்கையின்போது, மாவட்டத்தில் உள்ள 31 காவல் நிலைய எல்லைகளில் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மேலும், 19 சரித்திர பதிவேடு குற்றவாளிகள்மீது சட்டரீதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட காவல் துறை சாா்பில் ரெளடியிசம், கள்ளச்சாராயம் விற்பனை, போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் சட்டவிரோத செயல்கள் குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.