வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 மே 2026, 1:31 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை சாா்பில், சட்டம் -ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் ரெளடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நபா்கள்மீது தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு நடவடிக்கையின்போது, மாவட்டத்தில் உள்ள 31 காவல் நிலைய எல்லைகளில் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 22 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மேலும், 19 சரித்திர பதிவேடு குற்றவாளிகள்மீது சட்டரீதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட காவல் துறை சாா்பில் ரெளடியிசம், கள்ளச்சாராயம் விற்பனை, போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா்மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் சட்டவிரோத செயல்கள் குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.