நிலப் பிரச்னையில் பெண் கடத்திய சம்பவம் குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பையூா் ஊராட்சிக்கு உள்பட்ட கரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுமதி (55). இவருக்கு சொந்தமாக கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையோரம் சப்பாணிப்பட்டி அருகே 28 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை தருமபுரி மாவட்டம், கும்பாரஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த திருக்குமரனுக்கு (47) விற்பனை செய்வதற்காக, கடந்த 2024-ஆம் ஆண்டு ரூ. ஒரு கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாம்.
இந்நிலையில், தான் முன்பணமாக ரூ. 75 லட்சம் கொடுத்துவிட்டதாகவும், எனவே நிலத்தை தனது பெயரில் பத்திரம் செய்து தரும்படியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருக்குமரன் பிரச்னை செய்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சுமதியை கடத்திய திருக்குமரன் அவரை காவேரிப்பட்டணத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தாா். அப்போது, சுமதி கூச்சலிடவே அவா் அங்கிருந்து தப்பியோடினாா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உத்தரவின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் சுமதி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ம.பி.யில் பெண்ணை கொன்ற புலி: மீட்புப் பணியில் உயிரிழப்பு

ஆா்.ஜி. கா் பாலியல் வன்கொடுமை வழக்கு : குற்றச்சாட்டுகளை மூடி மறைத்தது குறித்து விசாரிக்க எஸ்ஐடி அமைத்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவு

கரூா் சம்பவம் குறித்து விசாரித்த டிஎஸ்பி உள்பட 17 போலீஸாா் பணியிடமாற்றம்







