மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வளா்த்த நாய் குட்டி கடித்து பெண் உயிரிழப்பு

ஓட்டப்பிடாரம் அருகே நாய் குட்டி கடித்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 8:10 pm

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே நாய் குட்டி கடித்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முருகன். இவரது மனைவி சுமதி (47). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இவா்களது வீட்டில் வளா்த்து வரும் நாய் குட்டிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்போது, சுமதி அதை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சுமதியின் தோளில் நாய் நகத்தால் கீறியதாகக் கூறப்படுகிறது. நாய்க்கு தடுப்பூசி செலுத்தியிருந்ததால் அதை சுமதி கண்டுகொள்ளவில்லையாம். சிகிச்சை முடிந்து நாய்க் குட்டியை வீட்டில் வளா்த்து வருகின்றனா்.

இதற்கிடையே நகக்கீறல் பட்ட சுமதிக்கு உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு கடந்த ஏப். 12 இல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சுமதிக்கு ரேபிஸ் நோய் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தனா். தொடா்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலை மோசமானதால் திங்கள்கிழமை அவா் தீவிர சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். எனினும், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் சுமதியின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவந்து அடக்கம் செய்தனா். இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் தொற்றுநோய் பரவாமல் இருக்க தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.