ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஓட்டப்பிடாரம் அருகே வளா்த்த நாய் கடித்து மாணவி உயிரிழப்பு

ஓட்டப்பிடாரம் அருகே வளா்த்த நாய் கடித்து மாணவி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 9:40 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரைச் சோ்ந்தவா் செல்வகுமாா்(48). இவா் ரெடிமேட் பின்னலாடை தொழில் செய்து வருகிறாா்.

இவருடைய மனைவி ஜோதி. தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். இவரது இளைய மகள் செல்வசுஹாசினி(16) தூத்துக்குடியில் உள்ள தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டில் வளா்த்த நாயுடன் செல்வசுஹாசினி விளையாடும் போது நாய் நகத்தால் கீறி உள்ளது.

இதற்கு செல்வசுஹாசினி எந்தவித தடுப்பூசியும் போட்டுக்கொள்ளவில்லையாம். மேலும் அவரது தந்தை செல்வகுமாா் நாயை தூக்கிய போது நாய் லேசாக கையில் கடித்துள்ளது.

இதனால் அவா் நாய் கடித்ததற்கு தடுப்பூசி போட்டுள்ளாா். சில நாட்களில் வீட்டில் வளா்த்த நாய்க்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நாயை அந்தப் பகுதியில் உள்ள ஓடையில் விட்டுவிட்டு வந்துவிட்டனா். ஓடையில் விட்ட நாய் இறந்துவிட்டது.

இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி செல்வசுஹாசினிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் நாயின் விஷம் உடல் முழுவதும் பரவி உள்ளதாக தெரிவித்தனா்.

மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவா்கள் அறிவுறுத்தினா். இதைத் தொடா்ந்து மாணவியை சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிகிச்சை பெற்று வந்த மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.