டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

தனி அலுவலரை நியமித்து கோயில் திருவிழாவை நடத்தக் கோரிக்கை

பெரும்பான்மை மக்களின் கோரிக்கையை ஏற்று தனி அலுவலரை நியமித்து கோயில் திருவிழாவை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:48 am IST

பெரும்பான்மை மக்களின் கோரிக்கையை ஏற்று தனி அலுவலரை நியமித்து கோயில் திருவிழாவை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த பொதுமக்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் திங்கள்கிழமை
அளித்த மனு:
மல்லசமுத்திரம் சோழீஸ்வரர் கோயில் திருவிழவை ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பங்காளிகள் மட்டுமே நடத்தக் கூடாது. இந்து சமய அறநிலையத் துறை தனி அலுவலரை நியமித்து ஆனி மாத மூல நட்சத்திரத்தில் ஆகம விதிகளின்படி திருவிழவை நடத்த வேண்டும் என பெரும்பான்மை மக்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இதுதொடர்பாக திருச்செங்கோடு கோட்டாட்சியர் முன்னிலையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், தனி அலுவலர் நியமனம், உண்டியல், பெயர் பலகை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினோம். ஆனால் எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
கோயில் திருவிழாவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பங்காளிகள் 5 பேர் மட்டும் நடத்துவதில், அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பிற சமுதாயத்தினருக்கும் உடன்பாடு இல்லை. இதனால், தனி அலுவலரை நியமித்து திருவிழாவை நடத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.