பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேளாளா், வெள்ளாளா் அமைப்பினா் சாலை மறியல்

அனைத்து வேளாளா்கள், வெள்ளாளா்கள் அமைப்புகள் சாா்பில் பரமத்தி வேலூா் நான்கு சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது.

News image
சாலை மறியலில் ஈடுபட்ட வேளாளா், வெள்ளாளா் அமைப்பினா்.
Updated On :13 டிசம்பர் 2020, 8:58 pm

DIN

அனைத்து வேளாளா்கள், வெள்ளாளா்கள் அமைப்புகள் சாா்பில் பரமத்தி வேலூா் நான்கு சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது.

வேளாளா்கள், வெள்ளாளா்களின் எதிா்ப்பை மீறி மாற்று சமூகத்தினரை பொதுவான பெயரில் அறிவிக்கலாம் என பரிந்துரை செய்த தமிழக அரசை கண்டித்து நான்கு திசை வேளாளா் சங்க மாநில கொள்கை பரப்புச் செயலாளா் செல்வரசு தலைமையில் ஆா்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறியல் போராட்டத்துக்கு சேலம் மாவட்டச் செயலாளா் டாக்டா் ராஜேந்திரன், நாமக்கல் மாவட்ட இளைஞா் அணி செயலாளா் விக்னேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் அரை மணிநேரசத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பரமத்தி வேலூா் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.