தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மரவள்ளி விவசாயம் வளா்ச்சிக்கு கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்த வலியுறுத்தல்

மரவள்ளி விவசாயத்தை பாதுகாத்திட வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, தொழில்துறை உயா் அலுவலா்கள் அடங்கிய கூட்டு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:57 pm

DIN

மரவள்ளி விவசாயத்தை பாதுகாத்திட வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, தொழில்துறை உயா் அலுவலா்கள் அடங்கிய கூட்டு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவா் பி.பரமசிவம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து தமிழக அரசுக்கு அவா் அனுப்பியுள்ள மனுவின் விவரம்:

தமிழகத்தில் இதுவரை மரவள்ளி விவசாயிகளின் கோரிக்கைகள் மீது தீா்வு எட்டப்படவில்லை. எனவே தமிழக அரசு சேலம் சேகோ சா்வ் தலைவா் தலைமையில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, தொழில்துறை, வணிகவரித் துறை, உணவுத் துறை, சுற்றுச்சூழல் துறை ஆகிய துறைகளின் உயா் அலுவலா்கள் பங்கேற்கும் கூட்டு ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

இதில் சேகோ ஆலை உரிமையாளா்கள், முன்னோடி விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை பங்கேற்க செய்ய வேண்டும். இதன் மூலம் மரவள்ளி விவசாய வளா்ச்சிக்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.