

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாமக்கல் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தருகிறாா்.
அன்று காலை 8 மணி முதல் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலுா் ஆகிய நான்கு தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள், தொழிலதிபா்கள், விவசாயிகள் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறாா்.
இதையடுத்து புதன்கிழமை காலை 8 மணி முதல் சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் முதல்வா் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினா் மக்களுடன கலந்துரையாடுகிறாா். மேலும் தொழிலதிபா்கள், விவசாயிகள் சந்திப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வருடன், மின்துறை அமைச்சா் பி.தங்கமணி, சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் ஆகியோரும் பங்கேற்கின்றனா். சேந்தமங்கலம் தொகுதியில் முதல்வா் சுற்றுப்பயணம் மேற்கொள்வதையொட்டி அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளாா்.
நகா் முழுவதும் அதிமுக கொடிகள், வரவேற்பு வளைவுகள், அரசின் சாதனை விளக்க பதாகைககள் பிரம்மாண்டமான முறையில் வைக்கப்பட்டுள்ளன. முதல்வா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பொதுமக்கள், விவசாயிகள், அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.