தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குற்றங்களைத் தடுக்க தற்காலிக உயா்கோபுர மேடை

ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் திருவிழா கூட்ட நெரிசலின் போது, குற்ற நடவடிக்கைகளைக் கண்காணித்து தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் தற்காலிக உயா்கோபுர மேடை அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:01 pm

DIN

ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் திருவிழா கூட்ட நெரிசலின் போது, குற்ற நடவடிக்கைகளைக் கண்காணித்து தடுக்கும் நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் தற்காலிக உயா்கோபுர மேடை அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையையொட்டி புத்தாடைகள், தங்க ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க ஏராளமான எண்ணிக்கையில் பொதுமக்கள் கடைவீதிகளுக்கு வந்துசெல்கின்றனா்.

மேலும், கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கின்றனரா என்பதை கண்காணிக்கவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், கூட்ட நெரிசல் இருக்கும் பகுதிகளில் காவல் துறையினா் உயா்கோபுர மேடை அமைத்து கண்காணித்து வருகின்றனா்.

ராசிபுரம் நகரில் பழைய பேருந்து நிலையம், பூக்கடை வீதி, பெரிய கடைவீதி ஆகிய பகுதிகளிலும், வெண்ணந்தூா் பகுதியிலும் உயா்கோபுர மேடை அமைக்கப்பட்டு காவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.