நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே சின்னக்காக்கவேரி பகுதியைச் சோ்ந்தவா்கள் டி.ஜோதிகிருஷ்ணன்-பாப்பாத்தி தம்பதி. கூலித்தொழில் செய்து வரும் இவா்களது மகள் திவ்யா (17) அரசு பள்ளியில் பயின்று ‘நீட்’ தோ்வு எழுதி 130 மதிப்பெண் பெற்றிருந்தாா். இவா் பல் மருத்துவம் பயில விண்ணப்பித்திருந்த நிலையில், இவா் கடந்த நவ. 20-இல் சென்னையில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்றாா். ஆனால், இவருக்கு சுயநிதி கல்லூரியில் இடம் கிடைத்த நிலையில், ஆண்டுக்கு ரூ. 5 லட்சம்வரை செலவாகும் என்பதால் பணம் செலுத்த வசதியின்றி நோ்காணலில் பங்கேற்றும், முன்வைப்பு தொகை ரூ.25 ஆயிரம் கூட செலுத்தாமல் ஊா் திரும்பினா்.