மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருச்செங்கோட்டில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் 

திருச்செங்கோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
Updated On :29 அக்டோபர் 2020, 7:31 am

DIN

திருச்செங்கோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாக தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் நலன் விரும்பும் தேசிய அமைப்பின் நாமக்கல் மாவட்ட கிளையின் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலையில அருகில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகளின் நான் விரும்பும் தேசிய அமைப்பின் நாமக்கல் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கத்தின் பொறுப்பாளர்கள் வஜ்ரவேல், பாலசுப்ரமணியம், தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சமீபத்தில் பேசிய ஒரு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் மனது புண்படுப்படியாக அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். அவரது பேச்சிற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனத்தை தெரிவித்தனர். காவல்துறையில் இது சம்பந்தமாக தொல்.திருமாவளவன் மீது தாங்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி முழக்கமிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.