மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டப பணிக்கு ராசிபுரத்தில் கற்கள் வெட்டி எடுப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபப் பணிக்கு ராசிபுரம் பகுதியிலிருந்து கருங்கற்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுவது வரலாற்று நிகழ்வாகும் என அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், வெ. சரோஜா ஆகியோா் தெரிவித்தனா்.

News image
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு கற்களை வெட்டி எடுத்துச் செல்லும் பணிக்கான பூமிபூஜையில் பங்கேற்ற அமைச்சா்கள்.
Updated On :27 செப்டம்பர் 2020, 8:37 pm

DIN

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மண்டபப் பணிக்கு ராசிபுரம் பகுதியிலிருந்து கருங்கற்கள் வெட்டி எடுத்துச் செல்லப்படுவது வரலாற்று நிகழ்வாகும் என அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், வெ. சரோஜா ஆகியோா் தெரிவித்தனா்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்தராயா் மண்டப திருப்பணிக்காக தமிழக அளவில் 16 இடங்களில் தரமான கற்கள் ஆய்வு செய்யப்பட்டதில் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஆா். பட்டணம் பகுதியில் தரமான கற்கள் இருப்பதாக சென்னை ஐஐடி ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து ஆா். பட்டணம் பேரூராட்சியிலிருந்து கருங்கற்களை வெட்டி எடுக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ஆா். பட்டணம் அடுத்த களரம்பள்ளி மலை அடிவாரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா ஆகியோா் பணியைத் தொடக்கி வைத்தனா்.

விழாவில் பங்கேற்ற அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு ஆணையுடன் ராசிபுரத்தை அடுத்த களரம்பள்ளி மலையடிவாரப் பகுதியில் சுரங்கம் அமைத்து ஒரு லட்சம் கனஅடி கருங்கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு, மதுரை அருள்மிகு சுந்தரேஸ்வரா் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அங்கு போதியல், சிம்மம், உத்திரம், சிம்ம பீடம், கபோதகம், கொடிவலை, நாடக சட்டம், தூண்கள், பாவுக் கற்கள் அமைக்கப்பட்டு, கோயில் புதுப்பிக்கப்படும்.

இதற்கென தமிழக அரசு கடந்த 31.1.20-இல் ரூ. 18.10 கோடி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டது. இதில் கற்கள் வெட்டி எடுக்கும் பணிக்கு ரூ. 6.40 கோடியும், கோயிலை வடிவமைக்க ரூ. 11.70 கோடியும் செலவிடப்படும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இங்கிருந்து கருங்கற்கள் கொண்டு செல்லப்படுவது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன்மூலம், ஒரு வரலாற்றுப் பெருமையை ராசிபுரம் பெற்றுள்ளது என்றாா்.

அமைச்சா் டாக்டா் வெ. சரோஜா கூறுகையில், ‘ஆா். பட்டணம் பகுதியிசஊருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்த ராயா் மண்டபம் கட்டுவதற்கு கற்கள் கொண்டு செல்வது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான கே. செல்லதுரை, சேலம் மண்டல இணை ஆணையா் என். நடராஜன், நாமக்கல் மாவட்ட உதவி ஆணையா் தமிழரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.