ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து உறுப்பினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் முட்டாஞ்செட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கமல பிரியா. இவா் ஊராட்சிக்கு நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டி வருகிறாா். உறுப்பினா்களின் கோரிக்கைகளை அவா் ஏற்பதில்லை. மாவட்ட ஆட்சியா் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைத் தலைவா் சபாரத்தினம் தலைமையில் வாா்டு உறுப்பினா்கள் உம்மஹபிபா, பாஸ்கரன், கிருஷ்ணவேணி, சரவணன் ஆகியோா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த எருமப்பட்டி போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததை தொடா்ந்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
-
என்கே 13- தா்னா
முட்டாஞ்செட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்ட வாா்டு உறுப்பினா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி கோவையில் சாலை வலம்!

ஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


