குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராசிபுரத்தில் நகைக்கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டம்

ராசிபுரத்தில், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நகை கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
ராசிபுரத்தில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள்.
Updated On :23 ஆகஸ்ட் 2021, 7:07 am

DIN

ராசிபுரத்தில், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நகை கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து,  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பெரிய கடை வீதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட நகைகடைகள் மற்றும் நகைபட்டறை உரிமையாளர்கள் காலை 9.30 மணி முதல் 11.30 வரை அடைத்து கடைகளின் முன்பாக கோரிக்கை அடங்கிய பதாகையுடன் போராட்டம் நடத்தினர். 

இந்த புதிய நடைமுறையால் சிறு தங்க நகை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய நடை முறையை ரத்து செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்திற்கு, ராசிபுரம் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். இதில், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.