தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ராசிபுரத்தில் நகைக்கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கடையடைப்பு போராட்டம்

ராசிபுரத்தில், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நகை கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image

ராசிபுரத்தில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நகைக்கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள்.

Updated On :23 ஆகஸ்ட் 2021, 7:07 am

ராசிபுரத்தில், தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நகை கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற மத்திய அரசின் புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து,  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பெரிய கடை வீதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட நகைகடைகள் மற்றும் நகைபட்டறை உரிமையாளர்கள் காலை 9.30 மணி முதல் 11.30 வரை அடைத்து கடைகளின் முன்பாக கோரிக்கை அடங்கிய பதாகையுடன் போராட்டம் நடத்தினர். 

இந்த புதிய நடைமுறையால் சிறு தங்க நகை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய நடை முறையை ரத்து செய்யவும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்திற்கு, ராசிபுரம் நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். இதில், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.