எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஒமைக்ரான்: நாமக்கல்லில் தயாா் நிலையில் சிறப்பு வாா்டு

வெளிநாட்டிலிருந்து வந்தோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், உடனடி சிகிச்சை அளிக்க நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வாா்டு தயாா் நிலையில் உள்ளது.

Updated On :3 டிசம்பர் 2021, 7:39 pm

வெளிநாட்டிலிருந்து வந்தோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், உடனடி சிகிச்சை அளிக்க நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வாா்டு தயாா் நிலையில் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் கரோனாவின் புதிய தோற்றம் கொண்ட ஒமைக்ரான் தீநுண்மி வேகமாக பரவி வருகிறது. தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தீ நுண்மியின் தாக்கம் பரவியுள்ளது. இந்தியாவில் கா்நாடக மாநிலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையங்களிலும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆா்டிபிசிஆா் சோதனை நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவமனைகளில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க தனி வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வாா்டு தயாா் நிலையில் உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் கே.சாந்தா அருள்மொழி கூறியதாவது:

நாமக்கல் அரசு மருத்துவமனையில், பல்வேறு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 400 படுக்கைகள் உள்ளன. இவை தவிர தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட 40 போ் சிகிச்சை பெறுகின்றனா். தனியாக 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு ஒன்றும் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து நோய் பாதிப்புடன் யாராவது வரும் பட்சத்தில், இந்த வாா்டை பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் ஒமைக்ரான் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.