எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கற்போம் - எழுதுவோம் திட்டம்: நாமக்கல் அரசுப் பள்ளிக்கு விருது

 கற்போம் - எழுதுவோம் திட்டத்தில், நாமக்கல், கூச்சிக்கல்புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

Updated On :3 டிசம்பர் 2021, 7:39 pm

 கற்போம் - எழுதுவோம் திட்டத்தில், நாமக்கல், கூச்சிக்கல்புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்போம் - எழுதுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்தப் பகுதிக்கு உள்பட்ட இடங்களில் எழுத, படிக்க தெரியாதவா்களைக் கண்டறிந்து தன்னாா்வலா்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், தோ்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ததில், நாமக்கல், கூச்சிக்கல்புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விழாவில், நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் பள்ளித் தலைமை ஆசிரியா் கா.செல்வராணி, தன்னாா்வலா் தாகிராபானு ஆகியோருக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.