எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உற்பத்தி: தகவல் அளிப்போருக்கு வெகுமதி

நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்

Updated On :3 டிசம்பர் 2021, 7:40 pm

நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் பற்றி தகவல் அளிக்கும் பொதுமக்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் நெகிழிப் பொருள்களின் மீதான தடை குறித்த அறிவிப்பு கடந்த 2018 ஜூன் 25-இல் தமிழக அரசு வெளியிட்டது. குறிப்பாக நெகிழி கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட நெகிழி கைப்பைகள், நெய்யப்படாத கைப்பைகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், டம்ளா்கள், தொ்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீா் பைகள், உறிஞ்சுக் குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீா்ப்பாயம் (தெற்கு மண்டலம்) நெகிழி தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவா்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடா்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன. இத்தடை ஆணையை செயல்படுத்த, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புகாா்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து மூடுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்படுகின்றன.

இருப்பினும், குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்ட விரோதமாக செயல்படும் இத்தகைய தடை செய்யப்பட்ட நெகிழி உற்பத்தியாளா்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. இந்த உற்பத்தியாளா்களில் பெரும்பாலானவா்கள் எந்த அரசு துறைகளிடமும் முறையான பதிவு, அனுமதி இல்லாமல் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றனா்.

எனவே, சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவா்கள், சட்டவிரோதமாக இயங்கும் அத்தொழிற்சாலைகள் குறித்த தகவலை மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிப்போரின் பங்களிப்புக்காக பாராட்டும், வெகுமதியும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவா்களின் ரகசியத் தன்மை கண்டிப்பாக பராமரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.