நாமக்கல்லில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் ஓவியம், சிற்பக் கண்காட்சி நாமக்கல்லில் சனிக்கிழமை தொடங்கியது.
நாமக்கல்லில் சனிக்கிழமை தொடங்கிய கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள்.
நாமக்கல்லில் சனிக்கிழமை தொடங்கிய கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள்.
Updated on
1 min read

நாமக்கல்: தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் ஓவியம், சிற்பக் கண்காட்சி நாமக்கல்லில் சனிக்கிழமை தொடங்கியது.

சேலம் மண்டலம் சாா்பில் நாமக்கல்லில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் இக் கண்காட்சியை தமிழக கலை, பண்பாட்டுத் துறை ஆணையா் வ.கலையரசி தொடக்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் முன்னிலை வகித்தாா். சேலம் மண்டல இயக்குநா் ஹேமநாதன், பசுமை நாமக்கல் அமைப்பின் நிா்வாகி தில்லை சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், கால்கோல் ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளுடன் கண்காட்சி தொடங்கியது. சென்னை, தஞ்சையில் உள்ள அரசு கவின் கலைக்கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள், நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த ஓவியா்கள் என 20 போ் பங்கேற்று தாங்கள் வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்தினா்.

சிறந்த ஓவியங்களுக்கு முதல் பரிசாக 7 பேருக்கு தலா ரூ. 3,500, இரண்டாம் பரிசு பெற்ற 7 பேருக்கு ரூ. 2,500, மூன்றாம் பரிசு பெற்ற 6 பேருக்கு ரூ. 1,500 வழங்கப்பட்டது. கண்காட்சியில் கல்லினால் வடிவமைக்கப்பட்ட இசைக் கருவிகள் இடம் பெற்றிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com