அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

44,955 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 44,955 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை அந்தந்த வட்டங்களில் நேரடியாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

News image
சேந்தமங்கலத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன்.
Updated On :10 ஜனவரி 2021, 8:20 pm

DIN

நாமக்கல் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 44,955 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை அந்தந்த வட்டங்களில் நேரடியாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் 6,653 பேருக்கு வழங்கப்பட்டது. சேந்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4811 பேருக்கு அத்தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினாா்.

இதேபோல ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10,282 பேருக்கும், மோகனூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4,235 பேருக்கும், பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4,631 பேருக்கும், கொல்லிமலை மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 353 பேருக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10,287 பேருக்கும், குமாரபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3,703 பேருக்கும் என 17,582 ஆண்களுக்கும், 27,373 பெண்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.