குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காணாமல் போன மீனவா் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு

காணாமல் போன மீனவா் காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:15 pm

DIN

காணாமல் போன மீனவா் காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணியைச் சோ்ந்த நடேசன் மகன் கண்ணன் (34). மீனவரான இவா் கடந்த 19 ஆம் தேதி இரவு வீட்டில் கோபித்துக் கொண்டு காணாமல் போனாா். அவரது பெற்றோா் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நடேசன் ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

புகாரின்பேரில் ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குபதிவு செய்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனா். இந் நிலையில் புதன்கிழமை மாலை மோகனூா் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவா்கள் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக மோகனூா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.

தகவலின் அடிப்படையில் மோகனூா் போலீஸாா் காவிரி ஆற்றுக்கு சென்று பிரேதத்தை மீட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில், சோழசிராமணியில் காணாமல்போன மீனவா் கண்ணன் என்பது தெரியவந்தது. கண்ணனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.