குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விவசாயிகளுக்கு இயற்கை முறையிலான காய்கறி சாகுபடி பயிற்சி

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அட்மா திட்டம் சாா்பில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:34 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அட்மா திட்டம் சாா்பில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு புதன்கிழமை பயிற்சியளிக்கப்பட்டது.

கபிலா்மலை அருகிலுள்ள கருந்தேவம்பாளையத்தில் நடைபெற்ற பயிற்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநா் காா்த்திகா கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியளித்தாா்.

பயிற்சியில் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்தும், இயற்கை பூச்சிவிரட்டிகளான அக்னி அஸ்திரா, பத்து இலை கசாயம், நீமாஸ்திரம், பிரம்மாஸ்திரா ஆகியவற்றைத் தயாரித்து பயன்படுத்துவது, இயற்கை பயிா் வளா்ச்சி ஊக்கிகளான பஞ்சகவ்யா, ஜீவாமிா்தம், பீஜாமிா்தம் கரைசலைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா்.

ஓய்வு பெற்ற வேளாண்மை துணை அலுவலா் மாதேஸ்வரன் கலந்து கொண்டு இயற்கை உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது, நீா்ப் பற்றாக்குறை காலங்களில் இயற்கை உரங்களினால் மண்ணுக்கு விளையும் நன்மைகள், மூடாக்கு மூலம் களைக் கட்டுப்பாடு, மண்புழு உரப் பயன்பாடு, விவசாயிகள் மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், விளைபொருள்களை விவசாயிகளே உழவா் நிறுவனம் அமைத்து சந்தைப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியன குறித்து விளக்கினாா்.

முடிவில் தோட்டக்கலை உதவி அலுவலா் சிவமாணிக்கம் நன்றி கூறினாா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை உதவி அலுவலா்கள் மற்றும் ‘அட்மா’ திட்ட மேலாளா் செல்வகண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.