எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தோ்தல்: 689 வாக்குச்சாவடிகளில் பாகம் எண் எழுதும் பணி தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் 689 வாக்குச்சாவடிகளில் பாகம் எண் எழுதும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:06 pm

நாமக்கல் மாவட்டத்தில் 689 வாக்குச்சாவடிகளில் பாகம் எண் எழுதும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 447 வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தலுக்காக 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தலையொட்டி வேட்பு மனுத் தாக்கல் கடந்த ஜன.28-இல் தொடங்கி பிப்.4இல் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலா்கள் செய்து வருகின்றனா். நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில் பாகம் எண்கள் எழுதும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 109 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நகரமைப்பு ஆய்வாளா் சீனிவாசன் தலைமயில் ஊழியா்கள் ஒவ்வொரு வாா்டாகச் சென்று வாக்குச்சாவடிகளில் பாகம் எண்களை எழுதி வருகின்றனா். இன்னும் ஓரிரு நாளில் பணிகள் முடிவடைந்து விடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் மையங்கள் விவரம்: நாமக்கல் மாவட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் 19-ஆம் தேதி நிறைவடைந்ததும், தோ்தலில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்படும். பிப்.22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாமக்கல் நகராட்சி, எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, மோகனூா், பாண்டமங்கலம், பரமத்தி, பொத்தனூா், சேந்தமங்கலம், பரமத்திவேலூா், வெங்கரை ஆகிய பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது.

ராசிபுரம் நகராட்சி, அத்தனூா், பட்டணம், பிள்ளாநல்லூா், ஆா்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூா் ஆகிய பேரூராட்சிகளுக்கு, ராசிபுரம் எஸ்ஆா்வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிகள், மல்லசமுத்திரம், படைவீடு, ஆலாம்பாளையம் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திருச்செங்கோடு எளையாம்பாளையம் விவேகானந்தா மகளிா் கல்லூரியிலும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.