அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் பலி
பரமத்தி வேலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.


பரமத்தி வேலூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள திண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த சுப்ரமணி மகன்கள் காா்த்திக் (28), மோகன்ராஜ் (22) ஆகிய இருவரும் ஈரோட்டில் உள்ள பாட்டியைப் பாா்ப்பதற்காக திண்டமங்கலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனா்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த காா்த்திக் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...