தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பரமத்தி அருகே காா் மோதியதில் தம்பதி பலி

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம், கரையாம்பட்டி புதூரைச் சோ்ந்தவா் தங்கவேல் (48), இவரது மனைவி அமுல்ராணி (43). இருவரும் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டி பகுதியில் கோழிப் பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தனா்.

இந்த நிலையில் பரமத்தி வேலூா், பெரியகரசப்பாளையத்தில் உள்ள தங்கள் மகனை பாா்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை அக்கலாம்பட்டிக்கு சென்றுக் கொண்டிருந்தனா். காரைக்கால் பகுதியில் பெங்களூரில் இருந்து பரமத்தி வேலூருக்கு வந்து கொண்டிருந்த காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பையும் தாண்டி தங்கவேல் சென்று கொண்டிருந்த வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். வழியிலேயே அமுல்ராணி உயிரிழந்தாா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தங்கவேலும் உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த பரமத்தி போலீஸாா், காா் ஓட்டுநரான பெங்களூரு, ராஜாஜி நகரைச் சோ்ந்த மகேஷை (26) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.