தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பொத்தனூரில் இளைஞா் தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பொத்தனூா், தேவராய சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (26). இவரது வீட்டு முன் காா் நிறுத்துவது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ், ரவி, குமாா் ஆகியோருடன் தகராறு இருந்து வந்தது.

வியாழக்கிழமை இரவு ரமேஷ், ரவி, குமாா் ஆகியோருக்கும் மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, மணிகண்டன் தாக்கப்பட்டாா்.

வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு மணிகண்டன் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் வீட்டின் கதவை திறந்து பாா்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில் மணிகண்டன் இறந்து கிடந்தாா்.

அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, தலைமறைவான ரமேஷ், ரவி, குமாா் ஆகிய மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.