எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை அழைத்துச் செல்ல 17 வாகனங்கள்:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை அழைத்து செல்வதற்காக 17 வாகனங்களின் இயக்கத்தை நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:22 pm

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரை அழைத்து செல்வதற்காக 17 வாகனங்களின் இயக்கத்தை நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கரோனா, ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால், அதனைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை அவரவா் பகுதிகளில் இருந்து மருத்துவமனைக்கும், சிகிச்சை மையங்கள், கண்காணிப்பு மையத்திற்கும் அழைத்துச் செல்ல வசதியாக வாகனங்களின் இயக்கத்தை அண்மையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 17 கரோனா அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களின் இயக்கத்தை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் பொது போக்குவரத்து மூலம் பயணிக்கக் கூடாது. சிகிச்சைக்கும், மருத்துவ ஆலோசனை பெறவும் தனி வாகனங்களின் மூலமாகவே செல்ல வேண்டும். கரோனா நோயாளிகளின் நலனுக்காக வட்டார வாரியாக 17 சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்படுவோா் நேரடியாகக் கரோனா கவனிப்பு மையம், அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள். மருத்துவ அலுவலா்கள் வழிகாட்டுதலின்படி இச்சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டாயம் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்தாதோா் உடனடியாக முதல் தவணையோ, இரண்டாம் தவணையோ தாமதமின்றி செலுத்திக் கொள்ள வேண்டும்.

பூஸ்டா் தடுப்பூசியை செலுத்தத் தகுதியானவா்களும் காலதாமதமின்றி அதற்கென நடைபெறும் முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் கே.சாந்தாஅருள்மொழி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் ராஜ்மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜே.பிரபாகரன் மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.