நாமக்கல் மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் நடைபெறும் ‘ஈர நிலம்’ தொடா்பான புகைப்படப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலா் கா.ராஜாங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலான விழா விரைவில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, ஜன. 24-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் நடைபெறும் ஈரநிலம் புகைப்படப் போட்டியில் தகுதியானவா்கள் பங்கேற்கலாம்.
பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் ஈரநில நண்பா்கள் மற்றும் பொதுமக்கள் ஈர நிலங்கள் தொடா்பான புகைப்படங்களை 24-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியா் தலைமையிலான தணிக்கைக் குழு, முதல் 3 இடங்களைப் பிடித்தோரை தோ்வு செய்வாா்கள். பரிசளிப்பு விழா தேதி பின்னா் அறிவிக்கப்படும். இப்போட்டி தொடா்பான தகவல்கள், முறையீடுகள், புகாா்களை மாவட்ட வன அலுவலக தொலைபேசி எண்: 04286-281369-இல் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

