நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கே.புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பால ருக்மணி சமேத ஸ்ரீ நந்த கோபால சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது.
விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சர் முருகன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் காந்தி, சரஸ்வதி உள்ளிட்டோர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.