டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்தில் தவித்த குழந்தைகள், அதிகாரிகள்: பூட்டுப் போட்ட ஊழியரால் பரபரப்பு

நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்திற்குள் அதிகாரிகளையும், குழந்தைகளையும் அங்கு பணியாற்றும் ஊழியர் பூட்டி வைத்தார்.

News image

நாமக்கல் லக்கம்பாளையத்தில் அதிகாரிகளை, குழந்தைகளை உள்ளே வைத்து அங்கன்வாடி அமைப்பாளரால் பூட்டு போடப்பட்ட மையம்..

Updated On :5 மே 2022, 2:00 pm IST

நாமக்கல்: நாமக்கல் அருகே அங்கன்வாடி மையத்திற்குள் அதிகாரிகளையும், குழந்தைகளையும் அங்கு பணியாற்றும் ஊழியர் பூட்டி வைத்தார். இதுகுறித்த தகவலறிந்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நேரில் வந்து மீட்டார்.

நாமக்கல் நகராட்சி லக்கம்பாளையம் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 20 குழந்தைகள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை படித்தும், உணவருந்தி விட்டும் செல்வார்கள். இங்கு அமைப்பாளராக சசிகலா என்பவர் பணியாற்றுகிறார். உதவியாளர் பணியிடம் சில ஆண்டுகளாக காலியாக உள்ளது. 

Story image

இந்த நிலையில் வியாழக்கிழமை அங்கன்வாடி மையத்திற்கு ஆய்வுக்கு வந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் வித்யாலட்சுமி மற்றும் மேற்பார்வையாளர் ஒருவரையும், 10க்கும் மேற்பட்ட குழந்தைகளையும் அங்கன்வாடி மையத்தில் வைத்து அமைப்பாளர் சசிகலா பூட்டு போட்டு பூட்டினார். 

இது பற்றிய தகவல் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளா தேவிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அவர் சக ஊழியர்களுடன் சம்பந்தப்பட்ட மையத்திற்கு வந்தார். இதனைத் தொடர்ந்து குழந்தைகளும், அலுவலர்களும் மீட்கப்பட்டனர். 

இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர் சசிகலா கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு கடிதம் அளித்தும் நடவடிக்கை இல்லை. பெற்றோர் கூறியதன் அடிப்படையில் அதிகாரிகளை, குழந்தைகளை மையத்திற்குள் வைத்து பூட்டினேன். உடனடியாக உதவியாளர் பணியிடம் நியமிக்கப்பட வேண்டும், சுற்றுப்புற வளாகத்தில் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Story image

இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பரிமளாதேவி கூறியதாவது: மாற்றுப்பணி மூலம் உதவியாளர் நியமித்தால் அதை தடுப்பதை அமைப்பாளர் சசிகலா வாடிக்கையாக கொண்டுள்ளார். குழந்தைகளுக்கு உணவு வழங்குவதில் தடை ஏற்படுத்துகிறார். ஆய்வுக்கு சென்ற எங்களுடைய வட்டார அலுவலர்,  மேற்பார்வையாளரை, குழந்தைகளை அறைக்குள் வைத்து பூட்டியுள்ளார். தகவலறிந்து சென்ற நான் அவர்களை மீட்டு வந்தேன். அங்கன்வாடி அமைப்பாளர் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.