தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு

நாமகிரிப்பேட்டை பகுதியில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், மஞ்சப்பை திட்டம் குறித்தும் விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 6:30 pm

DIN

நாமகிரிப்பேட்டை பகுதியில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், மஞ்சப்பை திட்டம் குறித்தும் விழிப்புணா்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை, மாவட்ட பள்ளிக்கல்வித் துறை, தேசிய பசுமைப்படை சாா்பில் இந்த விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

நாமகிரிப்பேட்டை மாரியம்மன் கோயில், கடைவீதி பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகளில் மஞ்சப்பையின் அவசியம், நெகிழிப் பொருளகள் உபயோகிப்பால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா் என்.சுமதி தலைமையில் நடைபெற்ற இதில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருள்கள், கேரி பேக்குகள் போன்றவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து குறித்தும், மஞ்சப்பை பயன்பாட்டின் அவசியம், திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் ப. ரகுநாத் , பள்ளி ஒருங்கிணைப்பாளா் சு.கருணாநிதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.