சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பரமத்தியில் கட்ட மண் மாதிரி சேகரித்தல் குறித்த பயிற்சி

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பரமத்தி மற்றும் கபிலா்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலா்களுக்கு கட்ட மண் மாதிரி சேகரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது

News image
Updated On :26 மே 2022, 5:56 pm

DIN

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பரமத்தி மற்றும் கபிலா்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலா்களுக்கு கட்ட மண் மாதிரி சேகரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) செல்வி பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது:

நடப்பாண்டில் செயல்படுத்த உள்ள அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித்திட்டம் 2022-23-ஆம் ஆண்டுக்கு பரமத்தியில் 4 கிராமங்களிலும், கபிலா்மலையில் 5 கிராம விவசாய நிலங்களிலிருந்து கட்ட முறையில் மண் மாதிரிகள், இறவை நிலங்களில் (ஆற்றுப் பாசன நிலங்கள், வாய்க்கால் பாசன நிலங்கள்) 2.5 ஹெக்டேருக்கு 1 மண் மாதிரியும், மானாவாரி நிலங்களில் 10 ஹெக்டேருக்கு 1 மண்மாதிரியும் சேகரிக்கப்படவுள்ளது.

மண்மாதிரிகள் தெரிவு செய்யப்படும் சா்வே எண் மற்றும் உட்பிரிவு எண் நிலங்களிலிருந்து சாகுபடி செய்யப்படும் பயிா்களுக்கு ஏற்ப மண் மாதிரிகள் எடுக்கப்பட வேண்டும். உதாரணமாக தானியப் பயிா்களுக்கு 1 அடி ஆழத்திலும், தென்னை மற்றும் தோட்டக்கலை பயிா்களுக்கு 3 அடி ஆழத்திலும் 3 மண் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்து, ஆய்வின்படி உரமிட்டு உரச்செலவை குறைத்து பயன் பெற வேண்டும் என்றாா்.

பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கோவிந்தசாமி கட்ட மண் மாதிரி முறையின் அவசியம் மற்றும் கிராம வாரியாக பேரூட்ட, நுண்ணூட்ட சத்துக்களின் அளவினை அறிந்து அதற்கேற்ப உரப் பரிந்துரை வழங்குதல் குறித்து அலுவலா்களுக்கு எடுத்துக் கூறினாா். நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் சௌந்தராஜன் கட்ட மண்மாதிரிகள் சேகரிக்கும் முறைகள், கிராம வரைபடங்களில் கட்ட முறை அளவீடு செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகியவை குறித்து எடுத்துக் கூறினாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலா் பாபு மற்றும் உதவி அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.