மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாய்ப் பாசம்! விபத்தில் சிக்கிய நண்பனை காப்பாற்ற போராடிய நாய்கள்

வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நண்பனை காப்பாற்றுமாறு, பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சாலையில் சென்றோரை குரைத்தபடி அழைத்த நிகழ்வினை பார்த்தோர் செய்வதறியாது

News image
நாமக்கல்-சேலம் சாலையில் விபத்தில் சிக்கிய நண்பனை காப்பாற்ற போராடிய நாய்கள்.
Updated On :7 நவம்பர் 2022, 9:28 am

DIN

வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நண்பனை காப்பாற்றுமாறு, பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சாலையில் சென்றோரை குரைத்தபடி அழைத்த நிகழ்வினை பார்த்தோர் செய்வதறியாது வேதனையில் கண்கலங்கினர். 

நாமக்கல்-சேலம் சாலை வாகனப் போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதி. இங்கு பேருந்து, லாரி, கார், இரு சக்கர வாகனங்கள் என நொடிக்கு நூறு எண்ணிக்கையில் அங்கும், இங்குமாக பறந்தபடி இருக்கும். இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் சாலையை கடக்க முயன்ற நாய் முகத்தின் மீது காரின் முன்பகுதி மோதியது. 

அந்த கார் நிற்காமல் சென்ற நிலையில், சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது நண்பனை கண்டு அவ்வழியாக சென்ற பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் அதனருகில் வந்து குரைத்தபடியும், கால்களால் அதனை தட்டியெழுப்பியவாறும், யாராவது உதவிக்கு வரமாட்டீர்களா என சாலையில் செல்வோரை பார்த்தபடியும் இருந்த காட்சி அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது.

Story image

காயமடைந்த நாயை மீட்டுச் சென்று சிகிச்சை அளிக்கும் இளைஞர்கள்.

அப்போது இளைஞர்கள் சிலர் விபத்தில் சிக்கிய நாயை மீட்டு சாலையோரம் உள்ள நடைப்பாதையில் வைத்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அதிகப்படியான ரத்தப்போக்கால் சிறிது நேரத்தில் நாய் இறந்து விட்டது. காக்கை, குரங்குகள் எவ்வாறு தங்களுடைய இனத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் சுற்றி நின்று குக்குரலிடுமோ, அதேபோல் நாய்களும் குரைத்தபடி உதவி கேட்டு அழைத்த நிகழ்வு மக்களிடத்தில் வேதனையை அளித்தது.

மனிதர்களாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. ஆனால் ஐந்தறிவு ஜீவன்களுக்கு கேட்பாரில்லை; கண்டுகொள்வாரில்லை. வாகனத்தில் அடிபட்ட நேரத்தில் மீட்டுச் சென்று சிகிச்சை அளித்திருந்தால் நாய் பிழைத்திருக்கும். மனிதர்களைப் போல், விலங்கினங்களுக்கும் உடனடி சிகிச்சை அளிக்கும் வகையிலான ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசு தொடங்க வேண்டும் என காயமடைந்த நாயை மீட்டுச் சென்று முதலுதவி அளித்த தன்னார்வலர்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.