மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

நாமக்கல்லில், மாநில நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.
Updated On :14 அக்டோபர் 2022, 2:22 pm

DIN

நாமக்கல்லில், மாநில நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் - மோகனூர் சாலையில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கோட்ட பொறியாளர் அலுவலகமும், அதன் பின்புறத்தில் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகமும் செயல்படுகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி, சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகளும்,  அங்குள்ள இதர ஊழியர்களும் பணம் வசூலித்து வந்ததாக நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் எம்.ராமச்சந்திரனுக்கு புகார் வந்தது.

இதனைத்தொடர்ந்து அவரது தலைமையில் ஆய்வாளர் நல்லம்மாள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.30 மணி அளவில் ஊழியர்கள் பணியை முடித்துவிட்டு வெளியில் செல்வதற்கு முன் அவர்களை மடக்கி அலுவலகத்திலேயே அமர வைத்து தீவிர விசாரணை நடத்தினர். 

கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் இரு அலுவலகங்களிலும் தீவிர சோதனை நடைபெற்றது. இதில், கணக்கில் இல்லாத ரொக்கப் பணம் ரூ.8 லட்சம் வரையில் கைப்பற்றப்பட்டது. அங்கு, ஆண், பெண் என அனைத்து ஊழியர்களிடத்திலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.